மெய்யெல்லாம் வெண்ணீறு சண்ணத்துச்
சடைவிரித்து மேன்மேல் அன்பு
செய்யும் அடியாரை வாழ்வித்து அவர்தம்
எதிரிகளை சிதறடிக்க
வெய்யதிரி சூலம் கை ஏந்திப்பா
தத்தில் வீரக்கழல் பூன்
ஐயனருட் சடைராயர் அடிபணிந்து
நலம் பலவும் அடைந்து வாழ்வாம்.
சார்ந்தார் தம் குறை தவிர்த்து வாழ்விக்கும்
சடைராயர் தம்பாகத்தே
ஆர்ந்தவர் சூலம் தாங்கி அங்கமெலாம்
திரு நீற்றை அடரப்பூசி
நேர்ந்தாடத் தாளமிட்டே உலகுயிர்கள்
வாழ்ந்துய்யும் நியதி காத்துக்
கூர்ந்தருள் செய்யும் சாந்த நாயகியின்
அடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.